(தி.மலை) தேர்வு எழுத சென்ற பிளஸ் 2 மாணவி கடத்தல் வாலிபர் போக்சோவில் கைது வேட்டவலம் அருகே

வேட்டவலம், மே 17: வேட்டவலம் அருகே தேர்வு எழுதச்சென்ற பிளஸ் 2 மாணவியை கடத்திய வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது பெண். இவர் அங்குள்ள பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். கடந்த மாதம் 3ம் தேதி தேர்வுக்கு சென்ற மாணவி, அதன்பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் பல இடங்களில் தேடினர். இருப்பினும் எவ்வித தகவலும் கிடைக்கவில்லை. இதுதொடர்பாக வேட்டவலம் போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் எஸ்ஐ யுவராஜ் தலைமையிலான போலீசார் மாணவியை தேடிவந்தனர். இந்நிலையில், மாணவியை பன்னியூர் கிராமத்தை சேர்ந்த அசோக்குமார்(22) என்பவர் கடத்தியதும், அவர் சென்னையில் உள்ள பூக்கடையில் வேலை செய்து வருவதும் தெரியவந்தது. நேற்று முன்தினம் பன்னியூர் அருகே உள்ள ஒரு கிராமத்தில் மாணவியுடன் அசோக்குமார் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் மாணவியை அவரிடம் இருந்து மீட்டு திருவண்ணாமலையில் உள்ள காப்பகத்தில் ஒப்படைத்தனர். மேலும், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து அசோக்குமாரை கைது செய்தனர்.

The post (தி.மலை) தேர்வு எழுத சென்ற பிளஸ் 2 மாணவி கடத்தல் வாலிபர் போக்சோவில் கைது வேட்டவலம் அருகே appeared first on Dinakaran.

Related Stories: