லா லிகா கால்பந்து தொடரில் பார்சிலோனா மீண்டும் சாம்பியன்: வீரர்களுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு

ஸ்பெயின்: லா லிகா எனப்படும் ஸ்பெயின் லீக் கால்பந்து ஆட்டத்தில் 27-வது முறையாக பட்டத்தை கைப்பற்றியுள்ள பார்சிலோனா அணிக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பளித்தனர். முன்னணி கிளப் அணிகளுக்கான லா லிகா கால்பந்து தொடர் ஸ்பெயினில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த லிகா ஆட்டத்தில் எஸ்பான்யோல் கிளப் அணியை 4-2 என்ற கோல் கணக்கில் பார்சிலோனா அணி வீழ்த்தியது. இதன் மூலம் ரியல் மாட்ரிட் உள்ளிட்ட எதிர் அணிகளை காட்டிலும் 14 புள்ளிகள் முன்னிலை பெற்று சாம்பியன் பட்டத்தை 27-வது முறையாக பார்கா அணி உறுதி செய்துள்ளது.

இதையடுத்து சொந்த ஊரான பார்சிலோனாவில் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டு அணி வீரர்களுக்கு உற்சாக வரவேற்பளித்தனர். திறந்தவெளி பேருந்தில் பார்சிலோனா மகளிர் அணியும் அழைத்து வரப்பட்டன. அப்போது வீரர், வீராங்கனைகளின் செல்ல பெயர்களை குறிப்பிட்டு முழக்கம் எழுப்பினர். லா லிகா கால்பந்து தொடரில் இன்னும் 4 ஆட்டங்கள் எஞ்சியுள்ளன. அதற்கு முன்னதாகவே பார்சிலோனா அணி அதிக புள்ளிகளை பெற்று பட்டத்தை உறுதி செய்துள்ளது. அதே சமயம் பார்சிலோனா மகளிர் குழு எட்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

The post லா லிகா கால்பந்து தொடரில் பார்சிலோனா மீண்டும் சாம்பியன்: வீரர்களுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு appeared first on Dinakaran.

Related Stories: