The post ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல் புதிய சாலைப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் appeared first on Dinakaran.
சென்னை: புதிய சாலைகள் அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து, நேற்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை மணப்பாக்கம் நெடுஞ்சாலை ராமாபுரத்தையும் – குன்றத்தூர் நெடுஞ்சாலையையும் இணைக்கும் சாலையாகும். கிட்டத்தட்ட 8 கி.மீ. நீளமுள்ள சாலையின் பெரும்பாலான பகுதிகள் பாதாள சாக்கடைத் திட்டம் உள்பட பல்வேறு பணிகள் காரணமாக குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது. ஓராண்டிற்கும் மேல் இப்பணிகள் நடைபெறுவதால் இயல்பு நிலை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. ஓரிரு இயந்திரங்களை வைத்துக் கொண்டு பல சாலைகளுக்கான பணிகளை ஒரே ஒப்பந்தக்காரர் மேற்கொள்ளும்போது இதுபோன்ற தாமதங்கள் ஏற்படுகின்றன. அபராதம் விதிக்கப்படுவதாக சென்னை மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டாலும், அதனால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை. சாலைப் பணிகள் விரைந்து முடிக்கப்பட வேண்டுமென்பதே மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. எனவே, புதிய சாலைகள் அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
The post ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல் புதிய சாலைப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் appeared first on Dinakaran.