காலபைரவர் கோயிலில் சிறப்பு பூஜை

மல்லசமுத்திரம், மே 13: மல்லசமுத்திரம் அடுத்த மோர்பாளையத்தில் உள்ள காலபைரவர் கோயிலில், தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, பகல் 12 மணி முதல் 2 மணி வரையில் காலபைரவருக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம் மூலம் சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது. இதில் சேலம், ஈரோடு, நாமக்கல் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

The post காலபைரவர் கோயிலில் சிறப்பு பூஜை appeared first on Dinakaran.

Related Stories: