இது தொடர்பாக ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், ட்விட்டருக்கு புதிய தலைமை அதிகாரியை நியமித்துள்ளேன் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்றும் அவர் 6 வாரங்களில் தனது பணியை தொடங்குவார் என்றும் கூறியுள்ளார். தயாரிப்பு, மென் பொருள், நிர்வாக தலைவர் மற்றும் தகவல் தொழில்நுட்பத் தலைவராக தமது பங்களிப்பு இருக்கும் என்றும் எலான் மஸ்க் குறிப்பிட்டுள்ளார். ட்விட்டருக்கு புதிய சி.இ.ஓவாக என்.பி.சி யுனிவர்சல் நிறுவன தலைவர் லிண்டா யாக்கரினோ (Linda Yaccarino)நியமிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
The post ட்விட்டர் நிறுவனத்திற்கு புதிய பெண் தலைமை செயல் அதிகாரி நியமனம் : எலான் மஸ்க் அறிவிப்பு.. appeared first on Dinakaran.