டிடிவி தினகரனின் கூடாரம் காலியாகிவிட்டது. அதில் ஒட்டகம் புகுந்த கதையாக தற்போது ஓபிஎஸ் புகுந்துள்ளார். நேற்று பண்ருட்டி ராமச்சந்திரன் பேட்டி கொடுத்திருந்தார். அவர் ஜெயலலிதா இருக்கும் போதே அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர். எம்ஜிஆருக்கும், ஜெயலலிதாவுக்குமே விசுவாசம் இல்லாதவர். அவர் எங்கு சென்றாலும் அந்த கட்சியே முடிந்துவிடும். இதுவரை அப்படித்தான் நடந்திருக்கிறது. இன்று அவர் நிழல் கூட அவரிடம் வரவில்லை.
பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு ஒரு கிளை செயலாளருக்கான தகுதி கூட கிடையாது. நேற்றைய தினம் அவர் அளித்துள்ள பேட்டியில், வைத்தியலிங்கம் மற்றும் மனோஜ் பாண்டியன், ஜேசிடி பிரபாகரன் ஆகியோரை காணவில்லை. கழகத்திற்கு ஊறு விளைவிப்பவர்களை கட்சியில் சேர்த்துக்கொள்ள மாட்டோம். தொண்டர்கள் என்ன கருதுகிறார்களோ, அதைத்தான் கட்சி செய்யும். அதிமுக என்பது எங்கள் தரப்பிற்கு வந்துவிட்டது. ஓபிஎஸ் எங்கு வேண்டுமானாலும் மாநாடு போடட்டும்,கவலையில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
என் பெயரில் எந்த சொத்தையும் வாங்கவில்லை: கடந்த சட்டமன்ற தேர்தல் வேட்பு மனுவில் சொத்துக்களை குறைத்து காட்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறித்த கேள்விக்கு, எடப்பாடி, ‘அரசியல் ரீதியாக என்னை எதுவும் செய்ய முடியவில்லை. இதனால் என் மீது வழக்கு தொடர்ந்திருக்கிறார்கள். அதை சட்டப்படி சந்திப்போம். விவசாயம் மட்டும்தான் செய்கிறேன். எந்த சொத்தையும் மறைக்கவில்லை. நான் இதுவரை என் பெயரில் எந்த சொத்தையும் வாங்கவில்லை. இது முழுக்க முழுக்க விதிமீறல் வழக்காகும். இதனை சட்டப்படி சந்திப்பேன்’ என்றார்.
The post இரண்டு துரோகிகளும் சேர்ந்து ஒரு அணி காலியான டிடிவி கூடாரத்தில் ஓபிஎஸ் ஒட்டகம் நுழைந்துள்ளது: எடப்பாடி பழனிசாமி கடும் சாடல் appeared first on Dinakaran.