இதையடுத்து சட்டவிரோதமாக மெக்சிகோ எல்லை வழியே அமெரிக்காவுக்குள் நுழைவதை தடுக்க பைடன் நிர்வாகம் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. எல்லையில் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு கண்காணிப்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. ஆனால், அரசு செயலி மூலம் விண்ணப்பித்தால் சட்டப்பூர்வமாக அமெரிக்காவில் குடியேற அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிபர் பைடன் கூறும்போது, “கொரோனா கட்டுப்பாடுகள் நீங்கிய பிறகும் மெக்சிகோ எல்லையை திறப்பதில் குழப்பமும், சிக்கலும் நீடிக்கிறது. மெக்சிகோ எல்லை விவகாரத்தில் சீர்திருத்தம் செய்ய நிர்வாகம் விரும்புகிறது. அதற்கு சிறிது காலங்கள் ஆகும்” என்றார்.
The post அமெரிக்கா – மெக்சிகோ எல்லை திறப்பில் குழப்பம்: அதிபர் ஜோ பைடன் விளக்கம் appeared first on Dinakaran.