இந்த மோக்கா புயல் தமிழ்நாட்டை விட்டு விலகி செல்லும் என்பதால் ,மே 11ம் தேதிக்கு பிறகு வெயில் உச்சம் தொடும் என்று தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் எச்சரித்துள்ளார்.தமிழ்நாட்டில் மார்ச் 1 முதல் இதுவரை இயல்பை விட114% கூடுதலாக மழை பெய்துள்ளது தெரியவந்துள்ளது. இதற்கு நேர்மாறாக வரும் நாட்களில் வெப்பம் அதிகரிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே வடதமிழக கடலோரப் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் இன்று ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
The post வங்கக்கடலில் வலுவடைந்தது காற்றழுத்தத் தாழ்வு பகுதி: மோக்கா புயல் தமிழ்நாட்டை விட்டு விலகி செல்லும் என்பதால் வெயில் உச்சம் தொடும் என கணிப்பு!! appeared first on Dinakaran.
