தொடர்ந்து விவசாய அமைப்பினர் சார்பில் ஆலோசனை கூட்டம் நடத்தது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மல்யுத்த வீரர்களுக்கு ஆலோசனை வழங்கும் வகையில் 21 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவினர் தலைமையில் நேற்றிரவு மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடத்தது. அப்போது குழுக்களின் தலைவர் சிர்சா கூறுகையில், ‘எங்களின் பொறுமையை சோதிக்க வேண்டாம் என்று ஒன்றிய அரசை கேட்டுக்கொள்கிறோம். ஒவ்வொரு விவசாய அமைப்பின் உறுப்பினர்களும் சுழற்சி முறையில் போராட்டத்தில் பங்கேற்போம். மல்யுத்த வீரர்களுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளிப்போம். வரும் 21ம் தேதிக்குள் இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பிரிஜ் பூஷண் சரண் சிங்கை கைது செய்யாவிட்டால் சில முக்கிய முடிவுகளை எடுப்போம்’ என்று கூறினார்.
The post மல்யுத்த வீரர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி ஆதரவு: பாஜக எம்பியை கைது செய்ய 21ம் தேதி வரை கெடு.! ஒன்றிய அரசுக்கு விவசாயிகள் குழு எச்சரிக்கை appeared first on Dinakaran.