மல்யுத்த வீரர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி ஆதரவு: பாஜக எம்பியை கைது செய்ய 21ம் தேதி வரை கெடு.! ஒன்றிய அரசுக்கு விவசாயிகள் குழு எச்சரிக்கை

புதுடெல்லி: வரும் 21ம் தேதிக்குள் பாலியல் புகாரில் சிக்கிய பாஜக எம்பியை கைது செய்யவில்லை என்றால் சில முக்கிய முடிவுகளை எடுக்க உள்ளதாக விவசாய அமைப்புகளின் தலைவர்கள் கூறினர். இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரும், பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷண் மீது பெண் மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார் கூறியதால், அவர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது. அவரை பதவி நீக்கம் செய்யக் கோரியும், கைது செய்யக் கோரியும் டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த 2 வாரத்திற்கும் மேலாக மல்யுத்த வீரர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், நேற்று பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாய அமைப்பினர் டெல்லியை நோக்கி படையெடுத்தனர். அவர்கள் மல்யுத்த வீரர்களை சந்தித்து, தங்களது ஆதரவுகளை தெரிவித்தனர்.

தொடர்ந்து விவசாய அமைப்பினர் சார்பில் ஆலோசனை கூட்டம் நடத்தது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மல்யுத்த வீரர்களுக்கு ஆலோசனை வழங்கும் வகையில் 21 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவினர் தலைமையில் நேற்றிரவு மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடத்தது. அப்போது குழுக்களின் தலைவர் சிர்சா கூறுகையில், ‘எங்களின் பொறுமையை சோதிக்க வேண்டாம் என்று ஒன்றிய அரசை கேட்டுக்கொள்கிறோம். ஒவ்வொரு விவசாய அமைப்பின் உறுப்பினர்களும் சுழற்சி முறையில் போராட்டத்தில் பங்கேற்போம். மல்யுத்த வீரர்களுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளிப்போம். வரும் 21ம் தேதிக்குள் இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பிரிஜ் பூஷண் சரண் சிங்கை கைது செய்யாவிட்டால் சில முக்கிய முடிவுகளை எடுப்போம்’ என்று கூறினார்.

The post மல்யுத்த வீரர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி ஆதரவு: பாஜக எம்பியை கைது செய்ய 21ம் தேதி வரை கெடு.! ஒன்றிய அரசுக்கு விவசாயிகள் குழு எச்சரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: