கத்தாரில் நடைபெறும் “தோஹா டையமண்ட் லீக்” தொடரில் தங்கம் வென்றார் நீரஜ் சோப்ரா!!

கத்தார்: கத்தாரில் நடைபெறும் “தோஹா டையமண்ட் லீக்” தொடரில் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார். ஈட்டி எரிதலில் 88.67 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து இந்திய வீரர் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா அசத்தினார்.

2021ம் ஆண்டு நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக் போட்டியின் ஒரு பகுதியாக ஈட்டி எறிதலில் தங்கம் வென்று வரலாறு படைத்த இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தொடர்ந்து பல்வேறு சாதனைகளை படைத்தது வருகிறார். நீரஜ் சோப்ரா கடந்த 2022ம் ஆண்டு நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியிலும் வெள்ளி அசத்தியிருந்தார்.

இந்நிலையில் கத்தாரில் நடைபெற்ற ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்ற நீரஜ் சோப்ரா பங்கேற்றார். அதில் 88.67 மீட்டர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்த முதல் இடத்தைப் பிடித்து நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கத்தை வென்றார்.

“தோஹா டையமண்ட் லீக்” தொடரில் தங்கப்பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு அனுராக் தாக்கூர் உள்ளிட்டோர் பலர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

The post கத்தாரில் நடைபெறும் “தோஹா டையமண்ட் லீக்” தொடரில் தங்கம் வென்றார் நீரஜ் சோப்ரா!! appeared first on Dinakaran.

Related Stories: