நாய் கடித்து 7 பேர் காயம்

 

திருமங்கலம், மே 5: திருமங்கலம் அருகேயுள்ள செக்கானூரணியை அடுத்துள்ள கே.புளியங்குளத்தில் மதுரை – தேனி மெயின் ரோட்டில் நேற்று காலை நாய் ஒன்று அந்த பகுதியில் செல்வோரை எல்லாம் துரத்தி துரத்தி கடித்தது. இதில் கண்ணுச்சாமி, மெய்யப்பன் உள்ளிட்ட 7 பேர் படுகாயடைந்தனர். புளியங்குளம் கிராமத்திற்குள் புகுந்த பலரையும் கடிக்க முயன்றதால் பொதுமக்கள் நாயை கண்மாய் பகுதிக்குள் விரட்டினர். இந்த சம்பவத்தில் காயமடைந்த அனைவரும் செக்கானூரணி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து புளியங்குளம் பஞ்சாயத்து தலைவர் சிவகாமி தர்மர் கூறுகையில், தெருநாய்களை கட்டுபடுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றார்.

The post நாய் கடித்து 7 பேர் காயம் appeared first on Dinakaran.

Related Stories: