தமிழ்நாடு தொடக்க பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

பள்ளிபாளையம், மே 5: பணி மூப்பின் அடிப்படையில் இடைநிலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்க கோரி பள்ளிபாளையத்தில் தமிழ்நாடு தொடக்கபள்ளி ஆசிரியர் மன்றத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளிபாளையம் ஒன்றியத்தில் பணியாற்றும் தகுதியான இடைநிலை ஆசிரியர்களுக்கு, பணி மூப்பின் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வினை வழங்க வேண்டும், இதற்கான திருந்திய கலந்தாய்வு கால அட்டவணை வெளியிட வேண்டும் என வலியுறுத்தி, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளிபாளையம் வட்டார கல்வி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வட்டாரத்தலைவர் கண்ணன் தலைமை தாங்கினார். ஆசிரியர் ரவிக்குமார் வரவேற்றார்.
மாவட்ட பொருளாளர் பிரபு, திருச்செங்கோடு வட்டார செயலாளர் கார்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பள்ளிபாளையம் வட்டார செயலாளர் இளையராஜா கோரிக்கையை விளக்கி பேசினார். மாவட்ட செயலாளர் சங்கர், மாநில பொருளாளர் முருக.செல்வராஜன், நிர்வாகிகள் ரவிக்குமார், தண்டபாணி ஆகியோர் பேசினர்.தமிழக ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகள் நாராயணன், கௌதம், சரவணன் தமிழ்நாடு தொடக்க பள்ளி ஆசிரியர் கூட்டணி நிர்வாகி பிரபு ஆகியோர் ஆசிரியர்களின் கோரிக்கைகளை வாழ்த்தி பேசினர். வட்டார பொருளாளர் சத்தியமூர்த்தி நன்றி கூறினார்.

The post தமிழ்நாடு தொடக்க பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: