மல்யுத்த வீரர்கள்-டெல்லி போலீஸார் இடையே மோதல்: வீரர்கள் காயம், ஜந்தர் மந்தரில் பதற்றம்

இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது இளம் மல்யுத்த வீராங்கனைகள் சிலர் பாலியல் குற்றச்சாட்டை முன் வைத்தனர். இந்த விவகாரத்தில் டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்தப் போராட்டத்தில் மல்யுத்த வீராங்கனைகளுக்கும், டெல்லி போலீஸாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. காவலர் உடையில் மது போதையில் வந்த சிலர் தங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக மல்யுத்த வீராங்கனைகள் குற்றம்சாட்டினர்.இந்த மோதலில் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகாத், பஜ்ரங் புனியா உள்ளிட்டோர் காயமடைந்தனர்.புதன்கிழமை இரவு நடந்த இந்த மோதலில் ஜந்தர் மந்தர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

The post மல்யுத்த வீரர்கள்-டெல்லி போலீஸார் இடையே மோதல்: வீரர்கள் காயம், ஜந்தர் மந்தரில் பதற்றம் appeared first on Dinakaran.

Related Stories: