விசாரணையில் துப்பாக்கி சூடு நடத்தியவர் டீயன் பேட்டர்சன் என அடையாளம் காணப்பட்டு உள்ளார். அவர் கடலோர காவல் படையின் முன்னாள் அதிகாரி என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதனால், அட்லாண்டா காவல் துறை மற்றும் பிற அதிகாரிகளின் விசாரணைக்கு கடலோர காவல் படையினர் ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர். இந்த நபரை பற்றிய தகவல் அளிப்போருக்கு 10 ஆயிரம் அமெரிக்க டாலர் பரிசு தொகையும் போலீசார் அறிவித்து உள்ளனர். அதிபர் பைடன் நிர்வாகமும் துப்பாக்கி சூடு சம்பவம் பற்றி தொடர்ந்து கண்காணித்து வருகிறது என வெள்ளை மாளிகையின் ஊடக செயலாளர் கரீன் ஜீன்-பியாரே தெரிவித்து உள்ளார்.
The post அமெரிக்காவில் உள்ள மருத்துவ மையத்தில் துப்பாக்கி சூடு நடத்திய மர்ம நபர்: ஒருவர் உயிரிழப்பு.! 5 பேர் காயம் appeared first on Dinakaran.