திருப்போரூரில் உலக புத்தக தினம்

திருப்போரூர்: உலக புத்தக தினம் மற்றும் உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு, திருப்போரூர் நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் பள்ளி மாணவ – மாணவிகளுக்கான பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி நேற்று நடத்தப்பட்டது. இதில், கலந்துகொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. இதில், வாசகர் வட்ட தலைவர் ஆர்.விஸ்வநாதன் தலைமை தாங்கினார். முன்னாள் தலைமையாசிரியர் தனஞ்செழியன் முன்னிலை வகித்தார். நூலகரும், வாசகர் வட்ட செயலாளருமான ரேவதி வரவேற்றார்.

மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் குமார், தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை மேரி ஸ்டெல்லா ஆகியோர் நூலக வாசகருக்கான பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டிகளை நடத்தி சிறந்தவற்றை தேர்ந்தெடுத்து அறிவித்தனர். விழாவில், திருப்போரூர் அரிமா சங்க பொருளாளர் தாமோதரன், தொழிலதிபர் திருக்குமரன் ஆகியோர் கலந்துகொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினர்.

The post திருப்போரூரில் உலக புத்தக தினம் appeared first on Dinakaran.

Related Stories: