தகவலறிந்து வந்த செம்பியம் போலீசார், படவேட்டான் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், படவேட்டான் வந்தவாசியைச் சேர்ந்த செந்தாமரை என்பவருக்கு ரூ.2 லட்சம் கடன் கொடுத்ததாகவும், அதனை அவர் திருப்பித் தராமல் செந்தாமரை ஏமாற்றி வந்துள்ளார். இதுபற்றி கேட்டபோது, பணத்தை தரமுடியாது என மிரட்டியது தெரிய வந்தது. இதுகுறித்து படவேட்டான் கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளார். அதில் வந்தவாசியைச் சேர்ந்த செந்தாமரை என்பவர் தன்னை மிரட்டுவதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
The post கடனை திருப்பி தராமல் மிரட்டல் எலக்ட்ரீஷியன் தற்கொலை appeared first on Dinakaran.
