புதுக்கோட்டையில் ஜல்லிக்கட்டு 800 காளைகள் அதகளம் 300 வீரர்கள் மல்லுக்கட்டு

புதுக்கோட்டை: புதுகை வடசேரிபட்டியில் இன்று நடந்த ஜல்லிக்கட்டில் 800 காளைகள் சீறி பாய்ந்தன. காளைகளை அடக்க 300 வீரர்கள் மல்லுக்கட்டினர். புதுக்கோட்ைட மாவட்டம் வடசேரிபட்டி பிடாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடந்தது. புதுகை, திருச்சி, தஞ்சை, ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், கரூர், பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் இருந்து காளைகள் அழைத்து வரப்பட்டன. காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்தனர்.

இறுதியாக 800 காளைகள், 300 மாடுபிடி வீரர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. காலை 9.15 மணிக்கு ஜல்லிக்கட்டை இலுப்பூர் ஆர்டிஓ குழந்தைசாமி கொடியசைத்து துவக்கி வைத்தார். வாடிவாசலில் இருந்து முதலாவதாக கோயில் காளை அவிழ்த்து விடப்பட்டது. இதைதொடர்ந்து ஒவ்வொரு காளையாக அவிழ்த்து விடப்பட்டன. காளைகளை வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர். பல காளைகள் வீரர்களுக்கு சிம்ம ெசாப்பனமாக விளங்கி களத்தில் நின்று விளையாடியது.

காளைகளை அடக்கிய வீரர்கள் மற்றும் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கு பீரோ, கட்டில், மின்விசிறி, மிக்சி, எவர்சில்வர் பாத்திரங்கள் மற்றும் ரொக்கத்தொகை பரிசாக வழங்கப்பட்டது.

The post புதுக்கோட்டையில் ஜல்லிக்கட்டு 800 காளைகள் அதகளம் 300 வீரர்கள் மல்லுக்கட்டு appeared first on Dinakaran.

Related Stories: