2 வருடமாக வராதவர் இப்போது அறிக்கை கொடுக்கிறார் என்றால் அது நல்ல நோக்கத்திலா இருக்க முடியும். அவருக்கு வேண்டும் என்றால் அப்படி ஒரு எண்ணம் இருக்கலாம். கட்சியில் இருக்கும் 99.9 சதவீதம் பேருக்கு கட்சியை இணைக்கும் எண்ணம் இல்லை. இது தான் தமிழ்நாடு முழுவதும் மதிமுக தொண்டர்களின் உணர்வு. 30 வருடம் நாங்கள் போராடி பயணித்து வந்துவிட்டோம். எத்தனையோ கஷ்டங்களை கடந்து வந்திருக்கிறோம். இதையும் கடந்து செல்வோம். துரைசாமி மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்விக்கு; நாங்கள் சிலவற்றை அலட்சியப்படுத்துகிறோம். சிலவற்றை நிராகரிக்கிறோம். ஜனநாயகப்படி கட்சி நடைபெற்று வருகிறது. கட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது. விரும்புகிறவர்கள் பொறுப்புக்கு வருகிறார்கள். இதற்கு மேல் நான் அதற்கு முக்கியத்துவம் கொடுத்து பேச விரும்பவில்லை. இவ்வாறு வைகோ கூறினார்.
The post 99.9 சதவீதம் பேருக்கு கட்சியை இணைக்கும் எண்ணம் இல்லை: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேட்டி appeared first on Dinakaran.
