புதுடெல்லி: ஐபிஎல் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 197 ரன்களை குவித்துள்ளது. புதுடெல்லி, அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் நேற்று நடந்த ஐபிஎல் 40வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்- டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதின. டாஸ் ஜெயித்த சன்ரைசர்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. 5 ரன் சேர்த்த நிலையில் மயங்க் அகர்வால், இஷாந்த் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். ராகுல் திரிபாதி 10 ரன், கேப்டன் மார்க்ரம் 8 ரன், ஹாரி ப்ரூக் ரன் எதுவும் எடுக்காமல் மிட்செல் மார்ஷ் பந்தில் அவுட் ஆயினர். ஒருபுறம் விக்கெட்கள் வீழ்ந்தாலும், மறுபுறம் அபிஷேக் சர்மா அதிரடியாக விளையாடினார். இவர் 25 பந்தில் அரை சதம் எட்டினார்.
இவர் 36 பந்துகளில் 67 ரன் குவித்து அக்சர் பந்தில் ஆட்டமிழந்தார். 6வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கிளாசன் – அப்துல் சமது இருவரும், டெல்லியின் பந்துவீச்சை வெளுத்து வாங்கினர். 2 சிக்சர்கள், ஒரு பவுண்டரி அடித்து 21 பந்தில் 28 ரன் எடுத்த நிலையில் அப்துல் சமத், மார்ஷ் பந்தில் ஆட்டமிழந்தார். மீண்டும் அதிரடி காட்டிய கிளாசன் 25 பந்தில் 4 சிக்சர்கள், 2 பவுண்டரியுடன் அரை சதம் அடித்தார். இறுதியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 197 ரன்கள் எடுத்தது. கிளாசன் 27 பந்தில் 53 ரன்கள், அகில் உசைன் 10 பந்தில் 16 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். டெல்லி தரப்பில் மிட்செல் மார்ஷ் 4, அக்சர் படேல், இசாந்த் சர்மா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். அடுத்து டெல்லி கேபிட்டல்ஸ் அணி 198 என்ற இமாலய இலக்குடன் களமிறங்கியது.
The post அபிஷேக், கிளாசன் அதிரடி அரைசதம் சன்ரைசர்ஸ் 197 ரன் குவிப்பு appeared first on Dinakaran.