தேனி அருகே நில மோசடி புகாரில் ஊராட்சி மன்றத் தலைவர் கைது..!!

தேனி: தேனி மாவட்டம் அணைக்கரைப்பட்டி கிராமத்தில் நில மோசடி புகாரில் ஊராட்சி மன்றத் தலைவர் லோகநாதன் கைது செய்யப்பட்டார். இறந்தவர்கள் பெயரில் போலி ஆவணங்கள் தயாரித்து மோசடியில் ஈடுபட்ட புகாரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் நடவடிக்கை எடுத்துள்ளது. ஜெயபிரகாஷ் என்பவரின் குடும்பத்துக்குச் சொந்தமான 2.54 ஏக்கர் நிலத்தை போலி ஆவணம் மூலம் அபகரித்ததாக புகார் எழுந்தது. ஜெயப்பிரகாஷின் தாத்தா, தந்தை உயிருடன் இருப்பதாக அரசு மருத்துவரிடம் வாழ்நாள் சான்றிதழ் பெற்றுள்ளனர்.

The post தேனி அருகே நில மோசடி புகாரில் ஊராட்சி மன்றத் தலைவர் கைது..!! appeared first on Dinakaran.

Related Stories: