அப்போது உள்ளே வந்த இருவர்,அரிவாளால் லூர்து பிரான்சிசை சரமாரியாக வெட்டினர்.அவர்களில் ஒருவர் என் மீது எப்படி காவல் நிலையத்தில் புகார் தெரிவிப்பாய் எனக் கேட்டு விட்டு தப்பிச் சென்றுள்ளார்.தகவலறிந்து முறப்பநாடு போலீசார் வந்து ரத்தவெள்ளத்தில் கிடந்த விஏஓவை மீட்டு நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு தூத்துக்குடி கலெக்டர் செந்தில்ராஜ்,எஸ்பி பாலாஜி சரவணன் ஆகியோர் நேரில் சென்று விசாரித்தனர்.இதனிடையே சிகிச்சை பலனின்றி விஏஓ லூர்து பிரான்சிஸ் இறந்தார்.இதையடுத்து ராமசுப்புவை போலீசார் கைது செய்தனர்.
இந்த நிலையில் மற்றொரு நபரான மாரிமுத்துவை பிடிக்க தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி பாலாஜி சரவணன் தலைமையில் 4 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இதனிடையே கொலை சம்பவத்தை கண்டித்து சென்னை, தாம்பரத்தில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள், வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கருப்பு பேட்ஜ் அணிந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த கொலை சம்பவத்தை தொடர்ந்து பதற்றம் நிலவுவதால், முறப்பநாடு, வல்லநாடு, கலியாவூர், அகரம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
The post மணல் கடத்தல் குறித்து போலீசில் புகார் அளித்த முறப்பநாடு விஏஓ வெட்டிக் கொலை: குற்றவாளிகளை பிடிக்க 4 தனிப்படை அமைப்பு!! appeared first on Dinakaran.