கொடிவேரி அணையில் குவிந்த 25,000 பேர்

கோபி: ஈரோடு மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலமாக கொடிவேரி அணை உள்ளது. இங்கு ஒவ்வொரு வார விடுமுறையின்போதும் சுற்றுலா பயணிகள் குவிவது வழக்கம். தற்போது சுட்டெரிக்கும் கோடை வெயிலில் இருந்து தப்பிக்க நேற்று கொடிவேரி அணைக்கு ஈரோடு, கோவை, நீலகிரி, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமின்றி பெங்களூரு, மைசூர் உள்ளிட்ட பகுதியில் இருந்தும் சுமார் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர்.

15 அடி உயரத்திலிருந்து அருவி போல் கொட்டும் அணை தண்ணீரில் குளித்தும், சுவையான மீன்களை சாப்பிட்டும்,பூங்காவில் விளையாடியும் மக்கள் பொழுதை கழித்து சென்றனர். மேலும் அணையின் மேல் பகுதியில் குடும்பம், குடும்பமாக பரிசல் பயணம் சென்று மகிழ்ச்சியடைந்தனர்.

The post கொடிவேரி அணையில் குவிந்த 25,000 பேர் appeared first on Dinakaran.

Related Stories: