சோழவரத்தில் பாமக ஆலோசனை கூட்டம்

புழல்: சோழவரத்தில், பாமக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. திருவள்ளூர் வடக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், சோழவரம் அடுத்த ஜனப்பன்சத்திரம் கூட்டுச்சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதற்கு கட்சி மாவட்ட தலைவர் பிரகாஷ் தலைமை தாங்கினார். இதில், வன்னியர்களுக்கான 10.5% தனி இட ஒதுக்கீடு வழங்கியதற்கான சட்டத்தை உடனடியாக தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றி, மே 31ம் தேதிக்குள் கல்வி வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு நியாயமான இட ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை வலியுறுத்தி தமிழக முதல்வருக்கு அனைத்து கட்சி சார்ந்த வன்னியர்களும் அரசியல் பாகுபாடு இன்றி குடும்பம் குடும்பமாக கடிதம் அனுப்ப வேண்டும். இட ஒதுக்கீட்டின் அவசியம் குறித்து கிராமம்தோறும் வீடு வீடாகச் சென்று பரப்புரை மேற்கொள்வது, டாக்டர் ராமதாஸ், டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் அறிவிக்கும் அனைத்து இட ஒதுக்கீடு போராட்டங்களிலும் குடும்பம் குடும்பமாக பங்கேற்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில் மாவட்ட தலைவர் ரவி, டில்லி பாபு, சுதாகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 

The post சோழவரத்தில் பாமக ஆலோசனை கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: