அமெரிக்க அதிபர் தேர்தலில் 80 வயதான ஜோ பிடன் மீண்டும் போட்டியா?: விரைவில் அறிவிப்பு வெளியாகிறது

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் 80 வயதான ஜோ பிடன் மீண்டும் போட்டியிடுவது குறித்து விரைவில் அவர் அறிவிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்க அதிபராக இருக்கும் ஜோ பிடனின் (80) பதவிகாலம் அடுத்தாண்டு மத்தியில் முடியும் நிலையில், அடுத்தாண்டு நவம்பர் 5ம் தேதி அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. தற்போதைய அதிபர் ஜோ பிடன், மீண்டும் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பான தனது முடிவை வரும் சில நாட்களில் அறிவிப்பார் என்று கூறப்படுகிறது.

‘தி வாஷிங்டன் போஸ்ட், தி அசோசியேட்டட் பிரஸ், ப்ளூம்பெர்க்’ உள்ளிட்ட அமெரிக்க ஊடகங்கள் இதுதொடர்பாக செய்தி வெளியிட்டன. அந்த செய்தியில், ‘ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பிடன், வரும் 25ம் தேதி தான் அதிபர் தேர்தலில் போட்டியிடுவது குறித்து முக்கிய முடிவை அறிவிப்பார். அவர் மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிட விரும்புகிறார். கடந்த வாரம் அயர்லாந்து சென்ற அவர், விரைவில் அதிபர் தேர்தலில் போட்டியிடுவது குறித்த அறிவிப்பை வெளியிடுவேன் என்றார். முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் பட்டியலில் உள்ளார்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post அமெரிக்க அதிபர் தேர்தலில் 80 வயதான ஜோ பிடன் மீண்டும் போட்டியா?: விரைவில் அறிவிப்பு வெளியாகிறது appeared first on Dinakaran.

Related Stories: