223 கிலோ புகையிலைபொருட்கள் பறிமுதல்

ஆட்டையாம்பட்டி, ஏப்.20: ஆட்டையாம்பட்டியில் சேலம் மெயின்ரோடு பகுதியில் உள்ள அம்பிகா ட்ரேடர்ஸ் என்னும் வுட் ஒர்க்ஸ் கடையில், சேலம் ஊரக டிஎஸ்பி தையல்நாயகி தலைமையிலான தனிப்படை போலீசார், நேற்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, கடைக்கு அருகில் குடோன் வாடகைக்கு எடுத்து தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அங்கு மூட்டை மூட்டையாக ஹான்ஸ் 178 கிலோ, விமல் பாக்கு 8 கிலோ மற்றும் கூலிப் பில்டர் புகையிலை 37 கிலோ என ₹1.25 லட்சம் மதிப்புள்ள 223 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும், புகையிலை பொருட்கள் பதுக்கி விற்பனை செய்த ராஜஸ்தான் மாநிலம் சாலூர் பகுதியை சேர்ந்த பாவ்சிங் மகன் சைத்தன் சிங்(23), பாலூர் பகுதியை சேர்ந்த தக்சிங் மகன் ஜலம்சிங்(39) ஆகிய இருவரையும் பிடித்து, ஆட்டையாம்பட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இன்ஸ்பெக்டர் அம்சவல்லி வழக்குபதிவு செய்து, இருவரையும் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, மத்திய சிறையில் அடைத்தார்.

The post 223 கிலோ புகையிலை

பொருட்கள் பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: