புதுடெல்லி, கேரள மாநில முதல்வர்களை தொடர்ந்து ஆளுநர் விவகாரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மம்தா ஆதரவு

சென்னை: ஆளுநர்களின் ஜனநாயக விரோத செயல்பாடுகளுக்கு எதிரான முயற்சிக்கு மம்தா பானர்ஜி ஆதரவு, அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்ய அனைத்து எதிர்க்கட்சி முதல்வர்களும் சந்திக்க வேண்டும் என்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு கூறியதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். மாநிலங்களில் ஆளுநர்களின் ஜனநாயக விரோத செயல்பாடுகள் குறித்து மேற்கு வங்க முதல்வர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி என்னுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பாஜக அல்லாத மாநிலங்களில் ஆளுநர்களின் ஜனநாயக விரோத செயல்பாடுகளுக்கு எதிரான முயற்சிகளுக்கு தனது ஆதரவையும் பாராட்டையும் தெரிவித்தார். மேலும், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்ய அனைத்து எதிர்க்கட்சி முதல்வர்களும் சந்திக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட்டரில் கூறியுள்ளார். ஏற்கனவே டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், கேரளா முதல்வர் பினராயி விஜயன் ஆகியோரைத் தொடர்ந்து தற்போது மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் ஆதரவு தெரிவித்துள்ளார்.

The post புதுடெல்லி, கேரள மாநில முதல்வர்களை தொடர்ந்து ஆளுநர் விவகாரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மம்தா ஆதரவு appeared first on Dinakaran.

Related Stories: