பால் பாக்கெட் திருட்டில் அதிகாரிகளுக்கு தொடர்பு: நலச்சங்கம் குற்றச்சாட்டு

அம்பத்தூர்: அம்பத்தூர் ஆவின்பால் பண்ணை டிரைவர் சந்திரசேகர் (26), உதவியாளர் மோகன். கடந்த 30ம் தேதி பால் பாக்கெட்டுகள் நிரப்பப்பட்ட 20 டப்புகளை யாருக்கும் தெரியாமல் வாகனத்தில் ஏற்றினர். இதை அறிந்த அம்பத்தூர் ஆவின் பால்பண்ணை துணை பொது மேலாளர் சரவணகுமார் அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, ரூ.15,000 மதிப்புள்ள 480 பால் பாக்கெட்டுகளை திருடியதாக சந்திரசேகரை கைது செய்தனர்.

அம்பத்தூர் ஆவின்பால் பண்ணையில் 48 பால் பாக்கெட்டுகளை திருடியதாக டிரைவர் சக்திவேல் (23), உதவியாளர் ராபினை கைது செய்தனர். இந்த சம்பவங்கள் குறித்து தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர் நலசங்க தலைவர் பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘பால் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களுக்கும், அம்பத்தூர் ஆவின் பால் பண்ணையில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கும் தொடர்பு இல்லாமல் திருட்டு சம்பவம் அரங்கேறி இருக்காது. சிபிசிஐடி விசாரணைக்கு தமிழகஅரசு உத்தரவிட வேண்டும்’’ என்றார்.

The post பால் பாக்கெட் திருட்டில் அதிகாரிகளுக்கு தொடர்பு: நலச்சங்கம் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Related Stories: