அட்சய திருதியையொட்டி ஜிஆர்டி ஜூவல்லர்ஸில் சிறப்பு தள்ளுபடி

சென்னை: இந்தியாவின் மிகப்பெரிய நகைக் கடைகளில் ஒன்று ஜிஆர்டி ஜூவல்லர்ஸ். வரும் அட்சய திருதியை முன்னிட்டு, தங்கம், வைரம், பிளாட்டினம், வெள்ளி மற்றும் ரத்தின கற்களில் சமீபத்திய வடிவமைப்புகளின் மிகப்பெரிய தொகுப்பை ஜிஆர்டி அறிமுகம் செய்துள்ளது. மேலும் சில்வர் ஆர்டிகல்ஸ்சின் தொகுப்பும் இடம்பெற்றுள்ளது. அட்சய திருதியை முன்னிட்டு, ஜிஆர்டி ஜூவல்லர்ஸ் கோல்டன் ஆபர்களுடன் தங்க நகை சேதாரத்தில் 20 சதவீதம் தள்ளுபடி (சாலிடர்கள் தவிர்த்து), தங்க நாணயங்களுக்கு சேதாரம் இல்லை, வைரங்கள் மற்றும் அன்கட் வைரங்களின் மதிப்பில் 10 சதவீதம் தள்ளுபடி, வெள்ளிப்பொருட்களுக்கு செய்கூலி 25 சதவீதம் தள்ளுபடி மற்றும் நகைகளின் எம்ஆர்பியின் மீது 10 சதவீதம் தள்ளுபடி வழங்குகிறது.

எனவே, தங்க விலை ஏற்ற, இறக்கங்களிலிருந்து தற்காத்துக்கொள்ள வாடிக்கையாளர்கள் நகைகளை முன்பதிவு செய்யலாம் என தெரிவித்துள்ளது. இதுகுறித்து, ஜிஆர்டியின் நிர்வாக இயக்குனர்கள் ஜி.ஆர்.ஆனந்த் (அனந்தபத்மநாபன்), ஜி.ஆர்.ராதாகிருஷ்ணன் கூறுகையில், வாடிக்கையாளர்களின் முதன் பிராண்ட்டான ஜிஆர்டி ஜூவல்லர்ஸ் இந்த மங்களகரமான நாளில் சிறப்பு சலுகைகளுடன் வாடிக்கையாளர் நாளை இன்னும் சிறப்பானதாக மாற்ற உள்ளோம்’’ என்றனர்.

The post அட்சய திருதியையொட்டி ஜிஆர்டி ஜூவல்லர்ஸில் சிறப்பு தள்ளுபடி appeared first on Dinakaran.

Related Stories: