முல்லைப் பெரியாறு பராமரிப்பு வழக்கில் கேரளாவுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

புதுடெல்லி: முல்லைப் பெரியாறு அணை பராமரிப்பு விவகாரத்தில் கேரளா அரசு முட்டுக்கட்டையாக உள்ளது என உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தரப்பில் கடந்த மாதம் இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த நீதிபதிகள் எம்.ஆர்.ஷா மற்றும் சஞ்சய் கரோல் ஆகியோர், ‘‘முல்லைப் பெரியாறு அணை பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு அரசை, கேரள அரசு அனுமதிக்க வேண்டும். நிலுவையில் இருக்கும் அனைத்து மனுக்களுக்கும் ஒன்றிய அரசு அடுத்த இரண்டு வாரத்தில் விரிவான பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்ய வேண்டும் என நேற்று உத்தரவிட்டனர்.

The post முல்லைப் பெரியாறு பராமரிப்பு வழக்கில் கேரளாவுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: