ஆபாச வெப்சைட்களை ஒன்றிய அரசு முடக்க சரத்குமார் வலியுறுத்தல்

சென்னை: சமக தலைவர் சரத்குமார் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பொள்ளாச்சியைச் சேர்ந்த சபாநாயகம் என்பவர் ஆன்லைன் கிரிக்கெட் சூதாட்ட செயலியால் சுமார் ரூ.90 லட்சம் தொகையை இழந்த வேதனையில் தற்கொலை செய்து கொண்ட செய்தி வேதனையளிக்கிறது. சூதாட்டத்துக்கு தடை என்று சொல்லும்போது, அனைத்துவித ஆன்லைன் சூதாட்டங்களுக்கும் தடை விதித்திட வேண்டும். முக்கியமாக நான் ஏற்கெனவே பலமுறை தெரிவித்தது போல, இளைஞர்களை தவறான பாதைக்கு அழைத்துச் செல்லும் ஆபாச இணையதளங்களை முடக்க வேண்டும்.

The post ஆபாச வெப்சைட்களை ஒன்றிய அரசு முடக்க சரத்குமார் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: