தா.பழூர் அருகே வாலிபரை கல்லால் தாக்கி மிரட்டல் விடுத்தவர் கைது

தா‌.பழூர், ஏப்.14: தா.பழூர் அருகே வாலிபரை கல்லால் தாக்கி, கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டார். கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடி, சிறுகாட்டூர், பள்ளிக்கூடத் தெருவை சேர்ந்தவர் அண்ணாதுரை மகன் தீரன் (31). கார் ஆக்டிங் டிரைவர். கடந்த 12ம் தேதி அரியலூர் மாவட்டம் ஆயிபாளையம் கிராமத்தில் நடந்த உறவினர் வீட்டி நிகழ்ச்சியில் பங்கேற்ற இவர், நிகழ்ச்சி முடிந்து வீட்டிற்கு செல்ல நண்பர் செந்தில் என்பவருடன் கோடாலி கருப்பூர் காலனிதெரு தண்ணீர் டேங்க் அருகே நடந்து சென்றார்.

அப்போது, ஆயிபாளையம் கிராமத்தை சேர்ந்த மாரிமுத்து மகன் ஜெயப்பிரகாஷ் என்பவர் `வெளியூர்க்காரன் உனக்கு என்னடா இங்க வேலை’ என கேட்டு தகராறு செய்து அருகில் கிடந்த கல்லை எடுத்து தாக்கி, கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த தீரன் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று, மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தகவல் அறிந்த தா.பழூர் எஸ்ஐ வேல்முருகன் தீரனிடம் வாக்குமூலம் பெற்று வழக்கு பதிந்து கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்த ஜெயப்பிரகாஷை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post தா.பழூர் அருகே வாலிபரை கல்லால் தாக்கி மிரட்டல் விடுத்தவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: