ஏப்.16ம் தேதி 253வது பிறந்த நாள் விழாகவர்னகிரி மணிமண்டபத்தில் வீரன் சுந்தரலிங்கம் சிலைக்குஅமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மரியாதை செலுத்துகிறார்

தூத்துக்குடி, ஏப். 13: வரும் 16ம் தேதி விடுதலை போராட்ட வீரர் வீரன் சுந்தரலிங்கம் பிறந்த நாளையொட்டி கவர்னகிரி மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். இதுகுறித்து மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஓட்டப்பிடாரம் தாலுகா கவர்னகிரியில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் கட்டுப்பாட்டின்கீழ் அமைந்துள்ள விடுதலை போராட்ட வீரர் வீரன் சுந்தரலிங்கம் மணிமண்டபத்தில் தமிழ்நாடு முதல்வர் உத்தரவின்பேரில் அரசின் சார்பில் அவரது 253வது பிறந்த நாள் விழா வரும் 16ம் தேதி கொண்டாடப்படுகிறது. அன்று நடைபெறும் விழாவில் மீன்வளம் – மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், வீரன் சுந்தரலிங்கனார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி சண்முகையா எம்எல்ஏ முன்னிலையில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். இவ்விழாவில் சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் மற்றும் விடுதலை போராட்ட வீரர் வீரன் சுந்தரலிங்கனாரின் வழித்தோன்றல்கள், பல்வேறு அமைப்புகளை சேர்ந்த பிரதிநிதிகள், பொதுமக்கள் பங்கேற்கின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post ஏப்.16ம் தேதி 253வது பிறந்த நாள் விழா

கவர்னகிரி மணிமண்டபத்தில் வீரன் சுந்தரலிங்கம் சிலைக்கு

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மரியாதை செலுத்துகிறார்
appeared first on Dinakaran.

Related Stories: