திண்டுக்கல் மாவட்ட காங்கிரஸ் தலைவர் மீது வழக்குப்பதிவு

திண்டுக்கல்: ராகுல்காந்தி எம்பி பதவி தகுதி நீக்கத்தை கண்டித்து கடந்த 6ம் தேதி திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகம் அருகே காங்கிரஸ் எஸ்இ எஸ்டி பிரிவு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் பேசிய திண்டுக்கல் மாநகர் மாவட்ட தலைவர் துரை மணிகண்டன், ராகுல்காந்திக்கு தண்டனை வழங்கிய நீதிபதி குறித்து சர்ச்சையாக பேசியது குறித்து பாஜ சார்பில் திண்டுக்கல் எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து துரை மணிகண்டன் மீது திண்டுக்கல் நகர் வடக்கு போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

The post திண்டுக்கல் மாவட்ட காங்கிரஸ் தலைவர் மீது வழக்குப்பதிவு appeared first on Dinakaran.

Related Stories: