வீட்டு வசதி வாரிய பழைய குடியிருப்புகள் அனைத்தும் புதிதாக கட்டித் தரப்படும்: அமைச்சர் முத்துசாமி பேட்டி

சென்னை: வீட்டு வசதி வாரிய பழைய குடியிருப்புகள் அனைத்தும் புதிதாக கட்டித் தரப்படும் என்று அமைச்சர் முத்துசாமி பேட்டி அளித்துளளார். பயனாளிகளுக்கு ஒரு ரூபாய் செலவின்றி புதிதாக வீடு கட்டித் தரப்படும் என்று அமைச்சர் முத்துசாமி சென்னையில் பேட்டி அளித்துள்ளார். சென்னை கோடம்பாக்கம் புலியூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் 428 வீடுகளில் பல சிதிலமடைந்துள்ளன. புதிதாக வீடு கட்டித் தர அரசு நிதிஒதுக்க முடியாத சூழல் உள்ளது, தனியார் பங்களிப்புடன் வீடு கட்டித் தர நடவடிக்கை எடுக்கப்படும். தனியார் பங்களிப்புடன் வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள் கோவை, சென்னை உள்பட 3 இடங்களில் கட்டப்பட்டு வருகின்றன.

The post வீட்டு வசதி வாரிய பழைய குடியிருப்புகள் அனைத்தும் புதிதாக கட்டித் தரப்படும்: அமைச்சர் முத்துசாமி பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: