திரு.வி.க. நகர் தொகுதி சீமாத்தம்மன் காலனியில் 100 கேவிஏ டிரான்ஸ்பார்மர் விரைவில் அமைக்கப்படும்: அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்

சென்னை: சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது திரு.வி.க. நகர் தாயகம் கவி (திமுக) கேட்ட கேள்விகளுக்கு மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அளித்த பதில் வருமாறு:

திரு.வி.க. நகர் தொகுதியில் சீமாத்தம்மன் நியூ காலனி 3வது தெருவுக்கு தற்போது ஏகாங்கிபுரம் மெயின் ரோடு பகுதியில் உள்ள ஏகாங்கிபுரம் எஸ்.எஸ்.2 250 கிலோவாட் ஆர்எம்யு மூலம் மின்னூட்டம் வழங்கப்பட்டு வருகிறது.

அதிகரித்து வரும் மின்தேவையை கருத்தில் கொண்டு புதிதாக சீமாத்தம்மன் நியூ காலனி 3வது தெருவிற்கு 100 கேவிஏ மின்மாற்றி விரைவில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். திரு.வி.க. நகர் தொகுதியில் 25 புதிய மின்மாற்றிகள் அமைக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. தேவை ஏற்படின் புதிய ஆர்எம் அமைப்பதற்கு துறை நடவடிக்கை எடுக்கும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

The post திரு.வி.க. நகர் தொகுதி சீமாத்தம்மன் காலனியில் 100 கேவிஏ டிரான்ஸ்பார்மர் விரைவில் அமைக்கப்படும்: அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல் appeared first on Dinakaran.

Related Stories: