பகுதி அலுவலகங்களில் நாளை நடக்கிறது குடிநீர் வாரிய குறைதீர் கூட்டம்

சென்னை: சென்னை குடிநீர் வாரியம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை குடிநீர் வாரியம் சார்பில், திறந்தவெளி கூட்டங்கள் 2வது சனிக்கிழமைகளில் நடத்தப்பட உள்ளது. தற்போது, சில நிபந்தனைகளுடன் கூடிய தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளதின் பேரில், பாதுகாப்பு விதிமுறைகளை உரிய முறையில் கடைபிடித்து அனைத்து பகுதி அலுவலகங்களிலும் 2வது சனிக்கிழமைகளில் திறந்தவெளி கூட்டங்கள் நடைபெற உள்ளது. இந்த மாதத்திற்கான திறந்தவெளி கூட்டம் நாளை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை குடிநீர் வாரிய அனைத்து பகுதி அலுவலகங்களிலும் நடைபெறும். மேற்பார்வை பொறியாளர் தலைமையில் இந்த கூட்டங்கள் நடைபெறும். இதில் பொதுமக்கள் பங்கேற்று குடிநீர், கழிவுநீர் சம்மந்தப்பட்ட பிரச்னைகள், குடிநீர், கழிவுநீர் வரி மற்றும் கட்டணங்கள், நிலுவையில் உள்ள குடிநீர், கழிவுநீர் புதிய இணைப்புகள் தொடர்பான சந்தேகங்களை நேரில் மனுக்கள் வாயிலாக தெரிவித்து பயன்பெறலாம். மேலும் மழைநீர் சேகரிப்பு மற்றும் பராமரிப்பு தொடர்பான விளக்கங்களையும் கூட்டத்தின் வாயிலாக தெரிந்து கொள்ளலாம்….

The post பகுதி அலுவலகங்களில் நாளை நடக்கிறது குடிநீர் வாரிய குறைதீர் கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: