அரசு பள்ளியில் ஆண்டு விழா

பள்ளிபாளையம், மார்ச் 27: அலமேடு அரசு பள்ளியில், ஆண்டு விழாவையொட்டி மாணவர்களின் கலைநிகழ்ச்சி நடந்தது. பள்ளிபாளையம் அலமேடு அரசு பள்ளியின் ஆண்டுவிழா நடந்தது. தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக முன்னாள் பேரூராட்சி மன்றத்தலைவர் தனகோபால் பங்கேற்று பேசினார். ஆலாம்பாளையம் பேரூராட்சி கவுன்சிலர் சதீஷ் தனகோபால், காளிதாஸ், ஆசிரியர்கள் சரவணன், பாஸ்கர், மதிவேணி ஆகியோர் கலந்து கொண்டனர். பள்ளியில் நடந்த பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. தனியார் பள்ளி போல மேடை அமைக்கப்பட்டு, கலைநிகழ்ச்சிகள் நடந்தது.

Related Stories: