பள்ளிபாளையம், மார்ச் 27: பள்ளிபாளையம் அடுத்த ஓடப்பள்ளியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி பாலாஜி. வாய் பேச முடியாத இவர் விசைத்தறி கூலித்தொழிலாளி. இவரது மகள் லோகாஸ்ரீ(15), அரசு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். பிறவியிலேயே லேகாஸ்ரீக்கு கேட்கும் திறன் குறைவாக இருந்தது. இவருக்கு மருத்துவர்கள் அறுவை சிகிச்சையின் மூலம், கேட்கும் திறனுக்காக காதின் உட்புறம் ஒரு கருவியையும், வெளிப்புறம் ஒரு கருவியையும் பொருத்தினர். கடந்த பத்து வருடங்களாக இயங்கிய வெளிப்பகுதியில் உள்ள கேட்கும் கருவி பழுதாகிப் போனதால், மாணவியின் கற்கும் திறன் குறைந்து போனது. புதிய கருவியை பொருத்த ரூ.4.33 லட்சம் செலவாகுமென மருத்துவர்கள் தெரிவித்தனர்.