கண்ணமங்கலம், மார்ச் 26: கண்ணமங்கலம் அடுத்த 5புத்தூர் பிள்ளையார் கோயிலில் பயன்படாத வீட்டு உபயோக காஸ் சிலிண்டரில் கோயில் உண்டியலை வடிவமைத்த இளைஞர்களை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.
பொதுவாக கிராமங்களில் வசிக்கும் மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை அதிக விலை கொடுத்து வாங்க முடியாமல், இருக்கின்ற பொருட்களை கொண்டு தங்களுக்கு தேவையானதை வடிவமைத்து கொள்வார்கள். இதில், அவர்கள் செய்யும் பல பொருட்கள் ஆச்சரியமூட்டுபவையாக இருக்கும். இந்த வகையில் திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அருசூக 5புத்தூர் கிராமத்தில் உள்ள பிள்ளையார் கோயிலுக்கு வெளியே வைக்கப்பட்டுள்ள உண்டியல் வேறு எங்கும் இல்லாத வகையில் ஆச்சரியமூட்டும் வகையில் இருக்கிறது.