ராசிபுரம், மார்ச் 21: ராசிபுரம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், 2252 மூட்டை பருத்தி ரூ.50லட்சத்திற்கு ஏலம் போனது. ராசிபுரம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் (ஆர்.சி.எம்.எஸ்) சார்பில் கவுண்டம்பாளையம் ஏல மையத்தில், நேற்று பருத்தி ஏலம் நடந்தது. இதில் ராசிபுரம், புதுப்பாளையம், பட்டணம், வடுகம், பூசாரிபாளையம், காக்காவேரி, சிங்களாந்தபுரம், நத்தமேடு, கண்ணூர்பட்டி, கவுண்டம்பாளையம், சீராப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த பருத்தியை ஏலத்திற்கு கொண்டு வந்தனர்.