வந்தவாசி: வந்தவாசி அருகே மருமகள் தற்கொலைக்கு காரணமான மாமியாரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர். வந்தவாசி அடுத்த அதியனூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்வம். இவரது மனைவி சாந்தா(45). இவர்களுக்கு திருமணமாகி 25 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லையாம். இதனால் செல்வத்தின் தாயார் அலமேலு(80) என்பவர் சாந்தாவிடம் அடிக்கடி தகராறு செய்ததாக கூறப்படுகிறது. அதேபோல், கடந்த 16ம் தேதி சாந்தாவிடம் அவரது மாமியார் அலமேலு, குழந்தை இல்லாமல் இருப்பதைவிட சாவதே மேல் எனக்கூறி தகராறு செய்து தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சாந்தா வீட்டில் உள்ள அறைக்கு சென்று தனக்கு தானே மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டாராம்.