செய்யாறு அருகே பொதுமக்களுக்கு இடையூறு செய்த 2 பேர் கைது

செய்யாறு, மார்ச் 19; செய்யாறு அடுத்த தூசி சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் ஐயங்கார்குளம் கூட்ரோடு அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு ஒரு வாலிபர் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு செய்து காண்டிருந்தார். போலீசார் எச்சரித்தும் தொடர்ந்து ரகளையில் ஈடுபட்டிருந்தார். அந்த வாலிபரை பிடித்து விசாரித்ததில் காஞ்சிபுரம் ஏனாத்தூர் சாலை பகுதியை சேர்ந்த சாதிக் பாஷா மகன் சித்திக்(21) ரகளையில் ஈடுபட்டது தெரிய வந்தது.

இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து சித்திக்கை கைது செய்தனர். இதேபோல் செய்யாறு போலீசார் நேற்று ரோந்து சென்றனர். அப்போது புளியரம்பாக்கம் ஏரி அருகே பொதுமக்களுக்கு இடையூறு செய்து கொண்டிருந்த ராமச்சந்திரன்(34) என்பவரை கைது செய்தனர்.

Related Stories: