கள் விற்ற விவசாயி கைது

காங்கயம், மார்ச் 19:காங்கயம் அருகே சடையபாளையம் பகுதியில் கள் இறங்குவதாக ஊதியூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து போலீசார் நேற்று அப்பகுதியில் தீவிர சோதனை நடத்தினர். அப்போது சடையபாளையம் கிராமத்தில் உள்ள ஒரு தென்னத்தோப்பில் தென்னை மரங்களில் முட்டி கட்டி கள் இறக்கியது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கள் இறக்கியதாக அதன் உரிமையாளர் ஈஸ்வரமூர்த்தி (59) என்ற விவசாயி கைது செய்து, அவரிடமிருந்து மொத்தம் 3 லிட்டர் கள் பறிமுதல் செய்யப்பட்டது. கள் இறக்கிய முட்டிகளை உடைத்தும் அழித்தனர். இது குறித்து ஊதியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: