வெள்ளகோவில், மார்ச் 18: கரூர் மாவட்டம் குளித்தலை அருகே செப்பளப்பட்டியை சேர்ந்தவர் இளங்கோவன் (40). இவர் முத்தூர் அருகே ரங்கப்பையன்காடு பகுதியில் உள்ள அரிசி ஆலையில் குடும்பத்துடன் தங்கி வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் கோபிகா (14). முத்தூரில் உள்ள பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்த இவர் கடந்த சில மாதங்களாக பள்ளிக்கு செல்லவில்லை. காங்கயத்தில் உள்ள தையற்பயிற்சி நிலையத்திற்கு சென்று வந்தார்.