பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை

வெள்ளகோவில், மார்ச் 18: கரூர் மாவட்டம் குளித்தலை அருகே செப்பளப்பட்டியை சேர்ந்தவர் இளங்கோவன் (40). இவர் முத்தூர் அருகே ரங்கப்பையன்காடு பகுதியில் உள்ள அரிசி ஆலையில் குடும்பத்துடன் தங்கி வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் கோபிகா (14). முத்தூரில் உள்ள பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்த இவர் கடந்த சில மாதங்களாக பள்ளிக்கு செல்லவில்லை. காங்கயத்தில் உள்ள தையற்பயிற்சி நிலையத்திற்கு சென்று வந்தார்.

இந்நிலையில் நேற்று காலை கோபிகா வீட்டில் இருந்தார். மதிய உணவிற்காக இளங்கோவன் வீட்டிற்கு வந்தபோது, கோபிகா வீட்டு விட்டத்தில் சேலையில் தூக்கிட்டு சடலமாக தொங்கியுள்ளார். இதுகுறித்து புகாரின் பேரில் வெள்ளகோவில் போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Related Stories: