கீழக்கரை, மார்ச் 17: கீழக்கரையில் வடக்கு தெரு 7வது வார்டு உட்பட்ட பகுதியில் ரோடுக்கு மேலே தெரியும் அளவிற்கு கழிவுநீர் குழாய்கள் பதித்து இருப்பதால் உடைப்பு ஏற்பட்டு சாக்கடை நீர் நிரம்பி வழிகிறது. இதனால் நோய் தொற்று ஏற்படும் என்ற அச்சத்தில் அப்பகுதி மக்கள் இருந்து வருகின்றனர். மேலும் இப்பகுதியில் இரண்டு மாதம் காலமாக நகராட்சியில் இருந்து மேற்பார்வையாளர்கள் பார்வையிட்டும் எந்த தீர்வும் இல்லை என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.