ராட்சத கிரேன் உதவியுடன் மின்விளக்கு சீரமைப்பு பணி சொத்து பிரச்சினையில் தந்தையை தாக்கிய மகன் கைது

முசிறி: திருச்சி மாவட்டம் முசிறி அருகே சுக்காம்பட்டி வடக்கி கொட்டம் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பையா(65). இவரது மகன் காமராஜ் (37) குடிபோதையில் தனது தந்தையிடம் சொத்தை அண்ணனுக்கு மட்டும் எழுதி தரப் போகிறாயா என தகராறு செய்தார். அப்போது திடீரென தந்தை மற்றும் தாய் பெரியம்மாள் இருவரையும் சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இந்த சம்பவம் குறித்து சுப்பையா, முசிறி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் எஸ்ஐ கோகிலா வழக்கு பதிந்து காமராஜை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.

Related Stories: