தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்

நாமக்கல், மார்ச் 16: நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில், மார்ச் மாதத்திற்கான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம், நாளை (17ம் தேதி) நடைபெற உள்ளது. இந்த முகாமில் பல்வேறு தனியார் நிறுவனங்கள் கலந்துகொண்டு மேனேஜர், கம்ப்யூட்டர் ஆபரேட்டர், மார்க்கெட்டிங் எக்ஸிக்யூட்டிவ், ஏரியா மேனேஜர், டீம் லீடர், சூபர்வைசர், அக்கவுண்டண்ட், கேஷியர், டைப்பிஸ்ட், மெக்கானிக், சேல்ஸ் அசிஸ்ட்டெண்ட் போன்ற பணிகளுக்கு ஆட்கள் தேர்வுசெய்ய உள்ளனர். 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், தேர்ச்சி பெறாதவர்கள், 12ம் வகுப்பு, டிப்ளமோ, பட்டப்படிப்பு, ஐடிஐ பயிற்சி, சிவில் டிராட்ஸ்மேன், இன்பர்மேஷன், கம்யூனிகேஷன், மெஷினிஸ்ட், மெக்கானிக், ஆட்டோ பாடி ரிப்பேர், கம்ப்யூட்டரில் ஜாவா, டேலி போன்ற பயிற்சி பெற்றோர் மற்றும் அனைத்துவித கல்வித் தகுதி உள்ள ஆண்களும், பெண்களும் முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம். இம்முகாமில் பங்குபெறும் வேலையளிப்போரும், வேலைநாடுநரும் எவ்வித கட்டணமும் செலுத்த தேவையில்லை. முற்றிலும் இலவசமான இம்முகாமின் மூலம், பணிவாய்ப்பு பெற்றவரது வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படாது தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள், நாளை காலை 10.30 மணிக்கு, மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் நடைபெறவுள்ள முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: