உடுமலை: குடிமங்கலம் ஒன்றியத்தில் ஊராட்சிகளில் வளர்ச்சி பணிகளை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் இன்று (16ம் தேதி) ஆய்வு செய்கிறார். இதுகுறித்து குடிமங்கலம் ஒன்றிய திமுக செயலாளர்கள் அணிக்கடவு கிரி, ராஜமாணிக்கம், முரளி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: குடிமங்கலம் ஒன்றியம் பெதப்பம்பட்டி வெங்கடசுப்பு நாயுடு திருமண மண்டபத்தில் இன்று (16 ம் தேதி) காலை 10.30 மணிக்கு குடிமங்கலம் ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளுக்கும் வளர்ச்சி திட்டங்கள் குறித்த ஆய்வு கூட்டம் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமையில், மாவட்ட திமுக செயலாளர் இல.பத்மநாபன், வடக்கு ஒன்றிய கழக செயலாளர் முன்னிலையில் நடைபெற உள்ளது.