குடிமங்கலம் ஒன்றியத்தில் ஊராட்சிகளில் வளர்ச்சி பணிகள் அமைச்சர் இன்று ஆய்வு

உடுமலை: குடிமங்கலம் ஒன்றியத்தில் ஊராட்சிகளில் வளர்ச்சி பணிகளை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் இன்று (16ம் தேதி) ஆய்வு செய்கிறார்.  இதுகுறித்து குடிமங்கலம் ஒன்றிய திமுக செயலாளர்கள் அணிக்கடவு கிரி, ராஜமாணிக்கம், முரளி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: குடிமங்கலம் ஒன்றியம் பெதப்பம்பட்டி வெங்கடசுப்பு நாயுடு திருமண மண்டபத்தில் இன்று  (16 ம் தேதி) காலை 10.30 மணிக்கு குடிமங்கலம் ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளுக்கும் வளர்ச்சி திட்டங்கள் குறித்த ஆய்வு கூட்டம் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமையில், மாவட்ட திமுக செயலாளர் இல.பத்மநாபன், வடக்கு ஒன்றிய கழக செயலாளர் முன்னிலையில் நடைபெற உள்ளது.

இதில் அனைத்து அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டு ஊராட்சிகளில் நடைபெறும் வளர்ச்சி பணிகள் குறித்தும், நடைபெற வேண்டிய வளர்ச்சி பணிகள் குறித்தும் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள உள்ளனர். எனவே, அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்கள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், ஒன்றிய குழு உறுப்பினர்கள், மாவட்ட குழு உறுப்பினர்கள் அவர்கள் சார்ந்த பகுதிகளில் உள்ள குறைகள், வளர்ச்சி திட்டங்கள் குறித்த தகவல்களை தெரிவிக்கும் வண்ணம் உரிய மனுக்களை தயார் செய்து ஒப்படைக்க கேட்டு கொள்ளப்படுகிறது. ஆய்வு கூட்டத்தில் அனைத்து ஊராட்சிகளை சார்ந்த உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் தவறாது கலந்துகொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

Related Stories: