மோகனூர், மார்ச் 15: நாமக்கல் மாவட்டம், மோகனூர் அருகே பேட்டப்பாளையம் ஊராட்சி மணியங்காளிபட்டி பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்ரமணி. விவசாயியான இவர், கரூர் மாவட்டம், மாயனூர் பகுதியில் இருந்து கால்நடைகளுக்கு தேவையான வைக்கோலை வாங்கி டிராக்டரில் ஏற்றிக்கொண்டு திரும்பிக் கொண்டிருந்தார். ஒருவந்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் அருகே சென்று வந்தபோது, அந்த வழியாக தாழ்வாக செல்லும் மின் கம்பியின் மீது வைக்கோல் பாரம் உரசியது.