வைக்கோல் தீ பற்றி எரிந்தது

மோகனூர், மார்ச் 15: நாமக்கல் மாவட்டம், மோகனூர் அருகே பேட்டப்பாளையம் ஊராட்சி மணியங்காளிபட்டி பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்ரமணி. விவசாயியான இவர், கரூர் மாவட்டம், மாயனூர் பகுதியில் இருந்து கால்நடைகளுக்கு தேவையான வைக்கோலை வாங்கி டிராக்டரில் ஏற்றிக்கொண்டு திரும்பிக் கொண்டிருந்தார். ஒருவந்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் அருகே சென்று வந்தபோது, அந்த வழியாக தாழ்வாக செல்லும் மின் கம்பியின் மீது வைக்கோல் பாரம் உரசியது.

இதில், தீப்பொறி விழுந்து வைக்கோல் பற்றி எரிந்தது. பின்னர், வேனுக்கும் பரவியது. உடனே, அங்கிருந்தவர்கள் துரிதமாக செயல்பட்டு மின்சாரத்தை துண்டித்தனர். தொடர்ந்து, டிராக்டரில் இருந்த வைக்கோல் கட்டுகளை கீழே தள்ளி அப்புறப்படுத்தினர். இதுகுறித்த தகவலின்பேரில், நாமக்கல் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: