பருத்தி, எள் ரூ.21 லட்சத்திற்கு ஏலம்

திருச்செங்கோடு, மார்ச் 15: திருச்செங்கோடு கூட்டுறவு சங்கத்தில் பருத்தி, எள் ரூ.21 லட்சத்திற்கு விற்பனையானது. பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த வியாபரிகள், விவசாயிகள் ஏலத்தில் கலந்து கொண்டனர். திருச்செங்கோடு வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் தலைமையகத்தில் நேற்று பருத்தி ஏலம் நடந்தது. பிடி ரகம் குவிண்டால் ரூ.7116 முதல் ரூ.8100 வரை விற்பனையானது. இதில் மொத்தம் 655 மூட்டை பருத்தி ரூ.15லட்சத்திற்கு ஏலம் போனது. எள் 50 மூட்டை விற்பனைக்கு வந்தது. இதில் கருப்பு எள் கிலோ ரூ.121.90 முதல் ரூ.159.10 வரையும், சிவப்பு எள் ரூ.126.90 முதல் ரூ.159.20 வரையும், வெள்ளை எள் ரூ.112.90 முதல் ரூ.159.20 வரை ஏலம் போனது. எள் ரூ.6 லட்சத்திற்கு ஏலம் போனது. பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான வியாபாரிகள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: